குறள்-67

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

மு.வ உரை

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

கலைஞர் உரை

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

Transliteration

Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal

Couplet

Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.

Explanation in English

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

குறள்-66

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

மு.வ உரை

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

கலைஞர் உரை

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

Transliteration

Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal
Mazhalaichchol Kelaa Thavar

Couplet

‘The pipe is sweet,’ ‘the lute is sweet,’ by them’t will be averred,
Who music of their infants’ lisping lips have never heard.

Explanation in English

“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children.

குறள்-65

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

மு.வ உரை

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.

கலைஞர் உரை

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

Transliteration

Makkalmey Theental Utarkinpam Matru Avar
Sorkettal Inpam Sevikku

Couplet

To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.

Explanation in English

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

குறள்-64

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

மு.வ உரை

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

கலைஞர் உரை

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

Transliteration

Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh

Couplet

Than God’s ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play’d.

Explanation in English

The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

குறள்-63

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

மு.வ உரை

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

கலைஞர் உரை

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

Transliteration

Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum

Couplet

‘Man’s children are his fortune,’ say the wise;
From each one’s deeds his varied fortunes rise.

Explanation in English

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

குறள்-62

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

மு.வ உரை

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

சாலமன் பாப்பையா உரை

பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

கலைஞர் உரை

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

Transliteration

Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap
Panputai Makkat Perin

Couplet

Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev’n-fold maze of birth.

Explanation in English

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

குறள்-61

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

மு.வ உரை

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

கலைஞர் உரை

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

Transliteration

Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira

Couplet

Of all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain.

Explanation in English

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

குறள்-60

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

மு.வ உரை

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

கலைஞர் உரை

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

Transliteration

Mangalam Enpa Manaimaatchi Matru Adhan
Nankalam Nanmakkat Peru

Couplet

The house’s ‘blessing’, men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament.

Explanation in English

The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.

குறள்-59

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

மு.வ உரை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

சாலமன் பாப்பையா உரை

புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

கலைஞர் உரை

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

Transliteration

Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun
Erupol Peetu Natai

Couplet

Who have not spouses that in virtue’s praise delight,
They lion-like can never walk in scorner’s sight.

Explanation in English

The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

குறள்-58

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்


குறள்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

மு.வ உரை

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

சாலமன் பாப்பையா உரை

பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

கலைஞர் உரை

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

Transliteration

Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku

Couplet

If wife be wholly true to him who gained her as his bride,
Great glory gains she in the world where gods bliss abide.

Explanation in English

If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.