குறள்-9

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

மு.வ உரை

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா உரை

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

கலைஞர் உரை

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

Transliteration

Kolil Poriyin Kunamilave Enkunaththaan
Thaalai Vanangaath Thalai

Couplet

Before His foot, ‘the Eight-fold Excellence,’ with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.

Explanation in English

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

குறள்-8

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

மு.வ உரை

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

கலைஞர் உரை

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

Transliteration

Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu

Couplet

Unless His feet ‘the Sea of Good, the Fair and Bountiful,’ men gain,
‘This hard the further bank of being’s change full sea to attain.

Explanation in English

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

குறள்-7

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

மு.வ உரை

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா உரை

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

கலைஞர் உரை

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

Transliteration

Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal
Manakkavalai Maatral Aridhu

Couplet

Unless His foot, ‘to Whom none can compare,’ men gain,
‘This hard for mind to find relief from anxious pain.

Explanation in English

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

குறள்-6

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

மு.வ உரை

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

கலைஞர் உரை

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

Transliteration

Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka
Nerinindraar Neetuvaazh Vaar

Couplet

Long live they blest, who ‘ve stood in path from falsehood freed;
His, ‘Who quenched lusts that from the sense-gates five proceed’.

Explanation in English

Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

குறள்-5

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மு.வ உரை

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

சாலமன் பாப்பையா உரை

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

கலைஞர் உரை

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

Transliteration

Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu

Couplet

The men, who on the ‘King’s’ true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.

Explanation in English

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

குறள்-4

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

மு.வ உரை

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

கலைஞர் உரை

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

Transliteration

Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila

Couplet

His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gain
Shall not, through every time, of any woes complain.

Explanation in English

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

குறள்-3

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

மு.வ உரை

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

சாலமன் பாப்பையா உரை

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

கலைஞர் உரை

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்

Transliteration

Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar

Couplet

His feet, ‘Who o’er the full-blown flower hath past,’ who gain
In bliss long time shall dwell above this earthly plain.

Explanation in English

They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.

குறள்-2

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

மு.வ உரை

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா உரை

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

கலைஞர் உரை

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

Transliteration

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin

Couplet

No fruit have men of all their studied lore,
Save they the ‘Purely Wise One’s’ feet adore

Explanation in English

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

குறள்-1

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் உரை

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

Transliteration

Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku

Couplet

A, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains

Explanation in English

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world