குறள்-70

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

மு.வ உரை

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை

தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

கலைஞர் உரை

“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

Transliteration

Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai
Ennotraan Kol Enum Sol

Couplet

To sire, what best requital can by grateful child be done?
To make men say, ‘What merit gained the father such a son?’

Explanation in English

(So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father.

குறள்-69

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மு.வ உரை

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

கலைஞர் உரை

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

Transliteration

Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai

Couplet

When mother hears him named ‘fulfill’d of wisdom’s lore,’
Far greater joy she feels, than when her son she bore.

Explanation in English

The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth.

குறள்-68

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

மு.வ உரை

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

கலைஞர் உரை

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

Transliteration

Thammindham Makkal Arivutaimai Maanilaththu
Mannuyirk Kellaam Inidhu

Couplet

Their children’s wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast.

Explanation in English

That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

குறள்-67

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

மு.வ உரை

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

கலைஞர் உரை

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

Transliteration

Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal

Couplet

Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.

Explanation in English

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

குறள்-66

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

மு.வ உரை

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

கலைஞர் உரை

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

Transliteration

Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal
Mazhalaichchol Kelaa Thavar

Couplet

‘The pipe is sweet,’ ‘the lute is sweet,’ by them’t will be averred,
Who music of their infants’ lisping lips have never heard.

Explanation in English

“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children.

குறள்-65

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

மு.வ உரை

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை

பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.

கலைஞர் உரை

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

Transliteration

Makkalmey Theental Utarkinpam Matru Avar
Sorkettal Inpam Sevikku

Couplet

To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.

Explanation in English

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

குறள்-64

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

மு.வ உரை

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

கலைஞர் உரை

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

Transliteration

Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh

Couplet

Than God’s ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play’d.

Explanation in English

The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

குறள்-63

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

மு.வ உரை

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

கலைஞர் உரை

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

Transliteration

Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum

Couplet

‘Man’s children are his fortune,’ say the wise;
From each one’s deeds his varied fortunes rise.

Explanation in English

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

குறள்-62

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

மு.வ உரை

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

சாலமன் பாப்பையா உரை

பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

கலைஞர் உரை

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

Transliteration

Ezhupirappum Theeyavai Theentaa Pazhipirangaap
Panputai Makkat Perin

Couplet

Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev’n-fold maze of birth.

Explanation in English

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

குறள்-61

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: மக்கட்பேறு


குறள்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

மு.வ உரை

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

கலைஞர் உரை

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

Transliteration

Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira

Couplet

Of all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain.

Explanation in English

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.