குறள்-2

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

மு.வ உரை

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா உரை

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

கலைஞர் உரை

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

Transliteration

Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin

Couplet

No fruit have men of all their studied lore,
Save they the ‘Purely Wise One’s’ feet adore

Explanation in English

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

குறள்-1

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் உரை

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

Transliteration

Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku

Couplet

A, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains

Explanation in English

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world