குறள்-32

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

மு.வ உரை

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

கலைஞர் உரை

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

Transliteration

Araththinooungu Aakkamum Illai Adhanai
Maraththalin Oongillai Ketu.

Couplet

No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.

Explanation in English

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

குறள்-31

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அறன் வலியுறுத்தல்


குறள்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

மு.வ உரை

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

சாலமன் பாப்பையா உரை

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

கலைஞர் உரை

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Transliteration

Sirappu Eenum Selvamum Eenum Araththinooungu
Aakkam Evano Uyirkku

Couplet

It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain.

Explanation in English

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess?

குறள்-30

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

மு.வ உரை

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

கலைஞர் உரை

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

Transliteration

Andhanar Enpor Aravormar Revvuyir Kkum
Sendhanmai Poontozhuka Laan

Couplet

Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue’s sons the name of ‘Anthanar’ men give.

Explanation in English

The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

குறள்-29

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள்

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது

மு.வ உரை

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

கலைஞர் உரை

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

Transliteration

Kunamennum Kundreri Nindraar Vekuli
Kanameyum Kaaththal Aridhu

Couplet

The wrath ’tis hard e’en for an instant to endure,
Of those who virtue’s hill have scaled, and stand secure.

Explanation in English

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

குறள்-28

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

மு.வ உரை

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

கலைஞர் உரை

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

Transliteration

Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum

Couplet

The might of men whose word is never vain,
The ‘secret word’ shall to the earth proclaim.

Explanation in English

The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

குறள்-27

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள்

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

மு.வ உரை

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

சாலமன் பாப்பையா உரை

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்..

கலைஞர் உரை

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

Transliteration

Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku

Couplet

Taste, light, touch, sound, and smell: who knows the way
Of all the five,- the world submissive owns his sway.

Explanation in English

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

குறள்-26

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

மு.வ உரை

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

கலைஞர் உரை

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

Transliteration

Seyarkariya Seyvaar Periyar Siriyar
Seyarkariya Seykalaa Thaar

Couplet

Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew.

Explanation in English

The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.

குறள்-25

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

மு.வ உரை

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

சாலமன் பாப்பையா உரை

அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

கலைஞர் உரை

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

Transliteration

Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan
Indhirane Saalung Kari

Couplet

Their might who have destroyed ‘the five’, shall soothly tell
Indra, the lord of those in heaven’s wide realms that dwell.

Explanation in English

Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.

குறள்-24

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

மு.வ உரை

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

சாலமன் பாப்பையா உரை

மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

கலைஞர் உரை

உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

Transliteration

Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu

Couplet

He, who with firmness, curb the five restrains,
Is seed for soil of yonder happy plains.

Explanation in English

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.

குறள்-23

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள்

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

மு.வ உரை

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

சாலமன் பாப்பையா உரை

இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

கலைஞர் உரை

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

Transliteration

Irumai Vakaidherindhu Eentuaram Poontaar
Perumai Pirangitru Ulaku

Couplet

Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue’s robe arrayed.

Explanation in English

The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).