கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து

ஆதி காலத்தில் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் கடவுளை வணங்கி தொடங்குவதே தமிழர்களின் இயல்பு. திருவள்ளுவரும் அவ்வாறே கடவுள் வாழ்த்து அதிகாரத்திலிருந்து திருக்குறளை தொடங்குகிறார்.

இந்த கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கடவுளே இந்த உலகிற்க்கு முதன்மையானவர் என்றும் அந்தக் கடவுளை பகுத்து அறிந்தவரிகளிடம் கற்றலே சிறந்த கல்வி என்றும் கடவுளின் திருவடிகளைப் பற்றுபவரே நீண்ட ஆயுளை பெறுவார் என்றும் பாரபட்சம் பார்க்காத கடவுளை படுபவர்களுக்கு என்றும் துன்பம் நெருங்காது என்றும் இறைவனை புரிந்துகொண்டால் புகழடையலாம் என்றும் ஐம்புலன்களை அடக்கி உண்மையை கையாள்பவர்களுக்கு உயர்ந்த வாழ்வு கிட்டும் என்றும் இறைவனடியை நாடினால் கவலையற்ற தெளிந்த மனதை பெற்று இந்த பிறவி என்னும் பெருங்கடலை நீந்தலாம் என்றும் கூறுகிறார்.

உலகம் போற்றும் தொன்மையான தமிழ் மொழியின் சிறப்புகள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தக் குடி தமிழ் குடி” என்று போற்றப்படும் அளவிற்க்கு தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும்.

தமிழ் பல மொழிகளின் தாய் மொழி எனக் கருதப்படுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக பேசப்படுகிற மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

தமிழ் மொழியில் உள்ளதுபோல் வேறு எந்த மொழிகளிலும் அதிக இலக்கண நூல்கள் இல்லை. இது தமிழுக்கே உரிய சிறப்பாகும்.

எதுகை மோனை வாக்கிய அமைப்பு உலகில் தமிழ் மொழியில் மட்டுமே காணப்படுகிறது. இது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும்

தமிழிற்க்கு 55,000 கல்வெட்டுகள் இந்தியாவில் கண்டுபிடிக்க பட்டுள்ளன. தாய்லாந்து,இலங்கை, எகிப்து போன்ற நாடுகளிலும் சில கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. உலகில் அதிகமான கல்வெட்டுகள் கொண்ட மொழி எது என்றால் அது தமிழ் மொழிதான்.

உலகில் தமிழர்கள் 205 நாடுகளில் வாழ்கிறார்கள்.

13 1/2 கோடிக்கு மேலாக தமிழர்கள் இருப்பதாகவும் ஒரு ஆய்வு.

குறள்-50

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

மு.வ உரை

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

கலைஞர் உரை

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

Transliteration

Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuryum
Theyvaththul Vaikkap Patum

Couplet

Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed.

Explanation in English

He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.

குறள்-49

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

மு.வ உரை

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

கலைஞர் உரை

பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

Transliteration

Aran Enap Pattadhe Ilvaazhkkai Aqdhum
Piranpazhippa Thillaayin Nandru

Couplet

The life domestic rightly bears true virtue’s name;
That other too, if blameless found, due praise may claim.

Explanation in English

The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it.

குறள்-48

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

மு.வ உரை

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை

மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

கலைஞர் உரை

தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

Transliteration

Aatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkkai
Norpaarin Nonmai Utaiththu

Couplet

Others it sets upon their way, itself from virtue ne’er declines;
Than stern ascetics’ pains such life domestic brighter shines.

Explanation in English

The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.

குறள்-47

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

மு.வ உரை

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை

கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

கலைஞர் உரை

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

Transliteration

Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan
Muyalvaarul Ellaam Thalai

Couplet

In nature’s way who spends his calm domestic days,
‘Mid all that strive for virtue’s crown hath foremost place.

Explanation in English

Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state

குறள்-46

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

மு.வ உரை

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

சாலமன் பாப்பையா உரை

மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?

கலைஞர் உரை

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

Transliteration

Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril
Pooip Peruva Thevan

Couplet

If man in active household life a virtuous soul retain,
What fruit from other modes of virtue can he gain.

Explanation in English

What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state?

குறள்-45

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

மு.வ உரை

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

கலைஞர் உரை

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

Transliteration

Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu

Couplet

If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain.

Explanation in English

If the married life possess love and virtue, these will be both its duty and reward.

குறள்-44

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

மு.வ உரை

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

கலைஞர் உரை

பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

Transliteration

Pazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai
Vazhiyenjal Egngnaandrum Il

Couplet

Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs.

Explanation in English

His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).

குறள்-43

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை

மு.வ உரை

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை

இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

கலைஞர் உரை

வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.

Transliteration

Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu
Aimpulaththaaru Ompal Thalai

Couplet

The manes, God, guests kindred, self, in due degree,
These five to cherish well is chiefest charity.

Explanation in English

The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.