பால்: அறத்துப்பால்
அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்
குறள்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
மு.வ உரை
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
சாலமன் பாப்பையா உரை
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
கலைஞர் உரை
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
Transliteration
Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai
Couplet
Of what avail is watch and ward?
Honour’s woman’s safest guard.
Explanation in English
What avails the guard of a prison? The chief guard of a woman is her chastity.

