குறள்-8

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

மு.வ உரை

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

கலைஞர் உரை

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

Transliteration

Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal
Piravaazhi Neendhal Aridhu

Couplet

Unless His feet ‘the Sea of Good, the Fair and Bountiful,’ men gain,
‘This hard the further bank of being’s change full sea to attain.

Explanation in English

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *