குறள்-1

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

மு.வ உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் உரை

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

Transliteration

Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku

Couplet

A, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains

Explanation in English

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world