ஆதி காலத்தில் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் கடவுளை வணங்கி தொடங்குவதே தமிழர்களின் இயல்பு. திருவள்ளுவரும் அவ்வாறே கடவுள் வாழ்த்து அதிகாரத்திலிருந்து திருக்குறளை தொடங்குகிறார்.
இந்த கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கடவுளே இந்த உலகிற்க்கு முதன்மையானவர் என்றும் அந்தக் கடவுளை பகுத்து அறிந்தவரிகளிடம் கற்றலே சிறந்த கல்வி என்றும் கடவுளின் திருவடிகளைப் பற்றுபவரே நீண்ட ஆயுளை பெறுவார் என்றும் பாரபட்சம் பார்க்காத கடவுளை படுபவர்களுக்கு என்றும் துன்பம் நெருங்காது என்றும் இறைவனை புரிந்துகொண்டால் புகழடையலாம் என்றும் ஐம்புலன்களை அடக்கி உண்மையை கையாள்பவர்களுக்கு உயர்ந்த வாழ்வு கிட்டும் என்றும் இறைவனடியை நாடினால் கவலையற்ற தெளிந்த மனதை பெற்று இந்த பிறவி என்னும் பெருங்கடலை நீந்தலாம் என்றும் கூறுகிறார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

